For Daily Alerts
Just In
"பேஸ்புக்" நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்க் அக்.9-ல் இந்தியா வருகை! பிரதமர் மோடியை சந்திக்கிறார்!!
டெல்லி: சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் இணைய மாநாட்டில் பங்கேற்பதற்காக அக்டோபர் 9-ந் தேதி இந்தியா வருகை தர உள்ளார்.
டெல்லியில் அக்டோபர் மாதம் 9, 10 ஆகிய தேதிகளில் இணைய மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்க் இந்தியா வருகை தர உள்ளார்.
இதே மாநாட்டில் இணைய வளர்ச்சி குறித்தும் அதன் பயன்பாட்டால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய உரையாற்ற உள்ளார். இம்மாநாட்டில் பங்கேற்ற பின்னர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களுடன் மார்க் ஜக்கர்பெர்க் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
Comments
English summary
Facebook co-founder Mark Zuckerberg to visit India, the second biggest market for the social networking giant, later this month.
Story first published: Wednesday, October 1, 2014, 14:07 [IST]