டெல்லி இணைய மாநாட்டில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்! பிரதமர் மோடியை சந்திக்கிறார்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் நடைபெற்று வரும் இணைய மாநாட்டில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் இன்று பங்கேற்றார். இதன் பின்னர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று அவர் சந்தித்து பேச உள்ளார்.
டெல்லியில் இன்றும் நாளையும் இணைய மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் இந்தியா வருகை தந்துள்ளார்.

இம் மாநாட்டில் இன்று பிற்பகல் நடைபெற்ற அமர்வில் மார்க் ஸக்கர்பெர்க் பங்கேற்று உரையாற்றினார். இதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களுடன் மார்க் ஸ்க்கர்பெர்க் சந்திப்பு மேற்கொள்கிறார்.












Click it and Unblock the Notifications