'பாரத மாதா கி ஜே' முழக்கம் எழுப்பாதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுக: மகா. முதல்வர் பட்நவிஸ்

Subscribe to Oneindia Tamil

மும்பை: பாரத மாதா கி ஜே என முழக்கம் எழுப்பாதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று மகாராஷ்டிரா முதல்வர் பட்நவிஸ் தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது.

பாரத மாதா கி ஜே என்ற முழக்கத்தை எழுப்ப வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருந்தார். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் அரசியல் தலைவர்கள் கருத்துக்களை கூறி வருவதால் சர்ச்சை வெடித்து வருகிறது.

Fadnavis on Bharat Mata slogan row

இந்நிலையில் பாரத மாதா கி ஜே கூறாதவர்கள் நாட்டில் இருக்க கூடாது என்று மகாராஷ்டிரா முதல்வர் பட்நவிஸ் தெரிவித்ததும் கடும் விமர்சனங்களை கிளப்பிவிட்டது. உடனடியாக இதற்கு விளக்கம் அளித்த அவர், பாரத் மாதா கி ஜே என முழங்க மறுப்பவர்கள், ஜெய் ஹந்த், ஜெய் பாரத் அல்லது ஜெய் இந்துஸ்தான் என முழங்கலாம். அதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனதான் கூட்டத்தில் பேசினேன்.

பாரத் மாதா கி ஜே சொல்ல மறுப்பவர்கள் பிரிவினைவாதிகள். அவர்கள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி தேச ஒற்றுமையை உடைக்க முயற்சிப்பவர்கள். அப்படிப்பட்டவர்களை நாம் ஏன் பொறுத்துக்கொள்ள வேண்டும்? என்று கொந்தளித்திருக்கிறார்.

இந்த விவகாரம் அம்மாநில சட்டசபையிலும் எதிரொலித்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பட்நவிஸ் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+