சட்ட மாணவி ஜிஷாவின் கொலைக்கு பின்னால் கேரள அரசியல் தலைவர்? அதிரவைக்கும் தகவல்கள்

Subscribe to Oneindia Tamil

கொச்சி: கேரளாவில் பலாத்காரம் செய்யப்பட்டு குடலை உருவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா வழக்கு குறித்த பல கட்டுக்கதைகள் வெளியாகியுள்ளன.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெரும்பாவூரில் வீட்டில் தனியாக இருந்த சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா(29) பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தால் கேரளாவில் மாணவர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது.

நிர்பயா போன்று

நிர்பயா போன்று

டெல்லியில் ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிர்பயா போன்று தான் ஜிஷாவுக்கும் நடந்துள்ளது. ஜிஷாவின் கழுத்தை நெறித்துக் கொன்று அவரின் குடல் உருவப்பட்டிருந்தது. அவரது உடம்பில் 30 இடங்களில் கத்திக் குத்து இருந்தது.

குடிப்பழக்கம்

குடிப்பழக்கம்

ஜிஷா வழக்கு குறித்து கேரளாவில் பல கதைகள் வெளியாகின. ஜிஷா குடிப்பழக்கம் உள்ளவர். அவர் போதையில் இருக்கும்போது தான் கொலை நடந்தது என்று கூறப்பட்டது. ஆனால் பிரேத பரிசோதனையில் அவரது உடலில் மது இல்லாதது தெரிய வந்தது.

அரசியல் தலைவர்

அரசியல் தலைவர்

ஜிஷா கொலையில் அரசியல் தலைவர் ஒருவருக்கு தொடர்பு உள்ளது. அவரின் மகள் தான் ஜிஷா. சொத்துக்காக அவரை ஆள் வைத்து கொலை செய்துவிட்டார் என்று கூறப்பட்டது.

எல்லாமே பொய்

எல்லாமே பொய்

ஜிஷா பற்றி இதுவரை வெளியான கதைகள் எல்லாம் பொய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜிஷா வழக்கில் முக்கிய குற்றவாளியான அஸ்ஸாமை சேர்ந்த நபரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+