ஆலமரத்தின் விழுதுகள் போன்று தொங்க வேண்டும்.. டெல்லி 11 பேர் மரணத்தில் அவிழாத முடிச்சு

11 பேர் தற்கொலை வழக்கில் ஆலமரத்தின் விழுதுகள் போன்று தொங்க வேண்டும் என்று டைரியில் எழுதி வைத்திருந்தனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    11 பேர் தற்கொலை வழக்கில் தொடர்புடைய சாமியாருக்கு போலீஸ் வலை வீச்சு- வீடியோ

    டெல்லி: 11 பேர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஆலமரத்தின் விழுதுகள் போன்று தொங்க வேண்டும் என்று டைரியில் எழுதி வைத்திருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

    டெல்லியில் புராரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். அவர்களுள் ஒருவர் மட்டும் தரையில் இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.

    11 பேரின் சடலங்களை கைப்பற்றிய போலீஸார் அவற்றை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குறிப்புகள்

    குறிப்புகள்

    அந்த வீட்டின் பூஜை அறையில் ஒரு டைரியை போலீஸார் கண்டெடுத்துள்ளனர். அதில் எந்த நாளில் தற்கொலை செய்து கொள்வது எப்படி தற்கொலை செய்து கொள்வது உள்ளிட்ட குறிப்புகள் எழுதியிருந்தன.

    பூஜை செய்தல்

    பூஜை செய்தல்

    கண்களையும், வாயையும் கட்டிக் கொண்டால் தூக்கிலிட்டுக் கொள்ளும் போது வலி தெரியாது என்றும் எழுதி வைக்கப்பட்டிருந்தது. இத்துடன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் அனைவரும் பாத் பூஜை செய்துள்ளனர். அதாவது ஆலமர விழுதுகள் போல் தொங்க வேண்டும் என்பதுதான் அந்த பூஜை.

    மாந்த்ரீகர்கள்

    மாந்த்ரீகர்கள்

    இதை அனைவரும் உறுதிமொழியாகவே எழுதி வைத்திருந்துள்ளனர். மேலும் கடவுளை பார்க்கவே இவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும் எழுதியிருந்தது. இந்த அமானுஷ்ய கடிதம் சிக்கியதால் போலீஸார் செய்வதறியாமல் திகைத்துள்ளனர். இதை மாந்த்ரீகர்கள் யாரேனும் சொல்லி இவர்கள் செய்தனரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செல்போன் சைலன்ட் மோட்

    செல்போன் சைலன்ட் மோட்

    இதனிடையே அவர்களது பிரேத பரிசோதனை அறிக்கைகள் வந்துள்ளன. அதில் 11 பேரும் எந்தவித போராட்டமுமின்றி அனைவரும் உயிரிழந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது. மேலும் அந்த டைரியில் இறைவனை பார்க்க போவதற்கு முன்பு யாரும் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என்று எழுதியிருந்ததால் 6 செல்போன்கள் சைலன்ட் மோடில் வைத்து ஒரு கவரில் சுற்றப்பட்டு அலமாரியில் இருந்தன.

    உணவு அருந்துதல்

    உணவு அருந்துதல்

    இவர்களுக்குள் உயிரிழந்த பிரியங்காவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஷாப்பிங் செல்வது குறித்து தனது உறவினருடன் இறப்பதற்கு முன்பு பிரியங்கா பேசியுள்ளார். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்தபோது குடும்பத்தினர் அனைவரும் 10.40 மணிக்கு உணவருந்தியுள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+