தற்கொலை செய்தால் சாகமாட்டோம்... கடவுள் காப்பாற்றுவார்... மூடநம்பிக்கையால் பலியான 11 பேர்
தற்கொலை செய்து கொண்டால் சாகமாட்டோம் என்றும் கடவுள் காப்பாற்றுவார் என்றும் மூடநம்பிக்கையால் 11 பேர் பலியாகிவிட்டனர்.
Recommended Video

டெல்லி: டெல்லியில் 11 பேர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டால் சாகமாட்டோம் என்றும் கடவுள் காப்பாற்றுவார் என்றும் மூடநம்பிக்கையால் 11 பேர் பலியாகிவிட்டனர்.
டெல்லியில் புராரி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அனைவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்ததால் இது கொலையா இல்லை தற்கொலையா என போலீஸார் குழம்பினர்.

தற்கொலை மரணம்
இதையடுத்து வீட்டை சோதனை செய்ததில் அவர்களது பணம், நகை என எந்த வித பொருட்களும் கொள்ளை போகவில்லை. வீட்டில் எந்த இடத்திலும் வெளியாட்களின் கைரேகைகள் கிடைக்கவில்லை. இதனால் போலீஸார் இந்த மரணங்களை தற்கொலை மரணம் என்ற முடிவுக்கு வந்தனர்.

இறைவனை காண...
இதையடுத்து வீடு முழுவதும் தேடியதில் இரு மர்ம டைரிகள் சிக்கின. அதில் சில குறிப்புகள் இருந்தன. எப்படி தற்கொலை செய்வது, தற்கொலை செய்து கொண்டால் இறைவனை காண முடியும் என்றெல்லாம் நம்பியுள்ளனர்.

செத்துவிடுவோம்
இதற்கேற்றாற்போல் டைரியில் சில குறிப்புகள் இருந்தன. அதில் சாவதற்கு முன்பு கை, வாய் கட்டி கொள்வது, கண்களை கட்டி கொள்வது ஆகியன இருந்தன. இந்நிலையில் இந்த குடும்பத்தினர் தற்கொலை செய்தால் செத்துவிடுவோம் என்று நம்பவில்லை என போலீஸார் தெரிவித்தனர்.

மூடநம்பிக்கை
தற்கொலை செய்தால் நம்மை கடவுள் காப்பாற்றுவார் என்று இவர்கள் நம்பியதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. கடவுளை பார்ப்பதற்காக கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் இரு பெரிய நோட்டு புத்தகங்களில் குறிப்புகள் எழுதியிருந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications