க்ரூப் கேப்டன் வருண் சிங்: 'அசாத்திய துணிச்சலு'க்காக குடியரசுத் தலைவரிடம் விருது பெற்றவர்
நேற்று நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்திலிருந்து தப்பித்த ஒரே ஒருவரான க்ரூப் கேப்டன் வருண் சிங், வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
"அவர் முழுமையாகக் குணமடைந்து வர பிரார்த்திக்கிறேன்என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்," என்று அந்த அமைச்சகத்தின் அலுவல்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
https://twitter.com/DefenceMinIndia/status/1468816777995972608
ஒருவேளை அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்றவேண்டிய தேவை ஏற்பட்டால் சமாளிப்பதற்காக, தமிழ்நாடு அரசு கோயம்புத்தூரில் அவருக்குச் சிகிச்சையளிக்க சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து வைத்துள்ளது. வெல்லிங்டனில் உள்ள ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் மாணவர்களிடையே உரையாற்றுவதற்காக வந்திருந்த ஜெனரல் ராவத்தை அழைத்து வருவதற்காக, க்ரூப் கேப்டன் வருண் சிங் சூலூர் சென்றிருந்தார்.
"பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட க்ரூப் கேப்டன் வருண் சிங், தற்போது உயிர் காக்கும் கருவியை கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்," என்று இன்று 11 மணியளவில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
யார் இந்த கேப்டன் வருண் சிங்?
கேப்டன் வருண் சிங், உத்தர பிரதேசத்தின் தேவரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
விபத்து குறித்து அறிந்த பிறகு அவரின் கிராம மக்கள் வருண் சிங் விரைவாக குணமடைய வேண்டும் என்ற பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
வருண் சிங்கின் உறவினர் அகிலேஷ் பிரதாப் சிங் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினார்.
புதின்கிழமை இரவு வருண் சிங்கிற்கு முக்கிய அறுவை சிகிச்சை நடந்ததாகவும் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டதாகவும் அகிலேஷ் பிரதாப் சிங் தெரிவித்திருந்தார்.
வருண் சிங்கின் தந்தை கிருஷ்ண பிரதாப், இந்திய ராணுவத்தில் ஓய்வுப் பெற்ற கர்னல் ஆவார்.
- பிபின் ராவத் மரணம்: இந்திய பாதுகாப்பு அமைச்சர் தரும் தகவல் என்ன?
- பிபின் ராவத்: பாஜகவின் குரலில் பேசியதாக விமர்சிக்கப்பட்ட ராணுவ அதிகாரி
"தற்போது வருண் சிங்கின் பெற்றோர் போபாலில் வசித்து வருகின்றனர். கேப்டன் வருண் சிங் தமிழ்நாட்டில் உள்ள வெலிங்டனில் பணியமர்த்தப்பட்டார். தமிழ்நாட்டில்தான் வருண் சிங், அவரின் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்," என கிருஷ்ண பிரதாப் சிங்கின் மூத்த சகோதரர் தினேஷ் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.
இலகுரக போர் விமானப் படையில் விங் கமாண்டராக இருந்தார். 2021 சுதந்திர தினத்தன்று, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திடம் ஷௌர்ய சக்ரா பதக்கத்தை, அசாத்தியமான துணிச்சலுக்காக வாங்கினார்.
அக்டோபர் 12, 2020 அன்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஓர் அறிக்கை வெளியிட்டது.
அந்த அறிக்கையில், "அவர் ஒரு போர் விமானத்தைப் பயிற்சி ஓட்டத்தில் ஈடுபடுத்தியிருந்தார். போர் விமானத்தைப் பரிசோதனை அடிப்படையில் அவர் ஓட்டிக்கொண்டிருந்தபோது, விமானி அமரும் அறையில் காற்றழுத்தக் கட்டுப்பாடு செயலிழந்தது."
"விமானம் மிக உயரமாகப் பறந்துகொண்டிருந்த சூழலில் இந்தச் சிக்கலை எதிர்கொண்டார். நெருக்கடியான சூழலிலும், பிரச்னையைச் சரியாகக் கண்டறிந்து, உயரத்தைக் குறைத்தார்."
"அந்த நேரத்தில், போர் விமானம் அதன் கட்டுப்பாட்டை இழக்கத் தொடங்கியது. கட்டுப்பாட்டை இழந்து, வேகமாகக் கீழ்நோக்கி விழத் தொடங்கியது.
உயிருக்கு ஆபத்தான, உடல் மற்றும் மன அழுத்தம் மிகுந்த அந்தச் சூழ்நிலையிலும்கூட, துணிச்சலோடு செயல்பட்டு, விமானத்தை மீண்டும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார் வருண் சிங்."
"கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பிறகு, சுமார் 10,000 அடி உயரத்தில் போர் விமானம் இருந்தபோது, மீண்டும் அதன் கட்டுப்பாட்டை இழந்தது. இப்படியான சூழலில் போர் விமானி, விமானத்தைக் கைவிட்டுவிட்டு, பாராசூட் மூலம் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்குத்தான் முனையும் சுதந்திரம் உண்டு."
"ஆனால், சரியாகத் திட்டமிட்டு, துணிச்சலோடும் சாதுர்யமாகவும் செயல்பட்டு, விமானத்தை மீண்டும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து பத்திரமாக தரையிறக்கினார்."
"இதன்மூலம், விமானப்படைக்குச் சொந்தமான விமானத்தைச் சேதமின்றிக் காப்பாற்றினார். அதுமட்டுமின்றி, தரையில் அந்த விமானம் விழுவதால் ஏற்படக்கூடிய விபத்து மூலமாக, சுற்றுவட்டாரத்தில் இருந்த மக்களுக்கும் எவ்விதச் சேதாரமும் ஏற்படுவதைத் தவிர்த்தார்," என்று கூறியிருந்தது.
இத்தகைய துணிச்சல் மிக்க செயலுக்காக அவருக்கு ஷௌர்ய சக்ரா பதக்கம், 2021-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று வழங்கப்பட்டது.
பிற செய்திகள்:
- ஒமிக்ரான் திரிபு: எவ்வளவு பெரிய ஆபத்து? எவ்வளவு வேகமாகப் பரவுகிறது?
- ஜமால் கஷோக்ஜி கொலை: சௌதியின் முன்னாள் அரச காவலர் பிரான்சில் கைது
- ரூ. 4.05 லட்சம் கோடி மதிப்பிலான பிட்காயின் ஒரு கம்ப்யூட்டர் விஞ்ஞானிக்கு சொந்தமானது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி













Click it and Unblock the Notifications