‘நாங்கள் இருக்கிறோம்’... விவசாயிகளுக்கு ராகுல் ஆறுதல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ‘நிலங்களைக் கையகப்படுத்த நாங்கள் விடமாட்டோம். நாங்கள் எப்போதும் உங்களுடனேயே இருக்கிறோம்' என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
நிலம் கையகப் படுத்தும் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் ஆம் ஆத்மி நடத்திய பேரணியில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அந்த விவசாயியின் உடல் வைக்கப் பட்டிருந்த மருத்துவமனைக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் நேரில் சென்று பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, ‘இது போன்ற தற்கொலை செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என அனைத்து விவசாயிகளிடமும், தொழிலாளர்களிடமும் கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கிறோம். நிலங்களை கையகப்படுத்த விடமாட்டோம் என நாங்கள் உறுதி அளிக்கிறோம். விவசாயிகளின் தற்கொலை இதற்கு முடிவாகாது' என்றார்.












Click it and Unblock the Notifications