டெல்லியில் இன்று விவசாயிகளின் மாபெரும் போராட்டம்.. நாடாளுமன்றத்தை முற்றுகையிட திட்டம்

டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாபெரும் போராட்டத்தை விவசாயிகள் நடத்தவுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பினர் நடத்தவுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். எனினும் போராட்டங்களுக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. இதனால் அங்கிருந்து சென்னை திரும்பினர்.

Farmer protest to hit Delhi today

இதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் டெல்லியில் போராட்டம் நடத்தினர். அப்போது பிரதமரை சந்திக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததால் சென்னை திரும்பினர்.

இந்நிலையில் காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைப்பது, உற்பத்தி விலையில் 50 சதவீத விலை நிர்யணம், சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் இன்று டெல்லியில் மாபெரும் போராட்டத்தை நடத்தவுள்ளனர்.

இதற்காக தமிழகத்திலிருந்து அய்யாகண்ணு தலைமையிலான விவசாயிகள், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் என ஏராளமானோர் அங்கு திரண்டு நாடாளுமன்றத்தை முற்றுகையிட உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+