Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பழைய ரூ500 நோட்டுகள் மூலம் விதைகளை வாங்கலாம்... விவசாயிகளுக்கு சலுகை அறிவிப்பு!

விவசாயிகள் பழைய 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து விதைகளை வாங்கிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விவசாயிகள் பழைய 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து விதைகளை வாங்கிக்கொள்ளலாம் என மத்திய அரசு சலுகை அறிவித்துள்ளது.

மத்திய அரசு கடந்த 8 ஆம் தேதி நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. அதற்கு பதில் மக்கள் வைத்திருக்கும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் 11 ஆம் தேதி முதல் மாற்றிக்கொள்ளலாம் என தெரிவித்தது.

Farmers can purchase seeds by using old Rs 500 Note: central govt offers...

புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதனால் வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் கூட்டம் அதிகரித்து மக்கள் பெரும் அவதிக்கு ஆளாயினர்.10 நாட்களுக்கு மேலாகியும் மக்களின் பணப்பிரச்சனை இதுவரை தீரவில்லை.

இதைத்தொடர்ந்து மின் வாரியம் மற்றும் பெட்ரோல் பங்குகளில் பழைய ரூபாய் நோட்டுகளை ஏற்க மத்திய அரசு ஆணையிட்டது. சுங்கச்சாவடிகளிலும் தற்காலிகமாக கட்டணத்தை ரத்து செய்துள்ளது.இந்நிலையில் தற்போது விவசாயிகளுக்கும் அரசு புதிய சலுகையை அறிவித்துள்ளது.

அதன்படி விவசாயிகள் தங்களின் பழைய 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து விதைகளை வாங்கிக்கொள்ளலாம் தெரிவித்துள்ளது. விவசாயிகள் தேசிய, மாநில விதை மையங்கள், வேளாண் மையங்கள், பொதுத்துறை கழகங்களில் விவசாயிகள் பழைய 500 ரூபாயை கொடுத்து விதைகளை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களின் அடையாள அட்டையை காண்பித்து பழைய 500 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+