பீகாரில் மோடியின் கூட்டத்திற்காக பயிர்களை அறுத்து நிலத்தை அளிக்க விவசாயிகள் எதிர்ப்பு
பாட்னா: பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்காக தங்களின் பயிர்களை முன்கூட்டியே அறுவடை செய்து நிலங்களை அளிக்க பீகார் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் உள்ள சுல்தான்பூரில் வரும் 12ம் தேதி நடக்க உள்ள கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். அவரது கூட்டம் நடக்கும் இடம் 40 விவசாயிகளுக்கு சொந்தமான விளை நிலம்.
இந்நிலையில் அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுல்தான்பூர் சென்று மோடியின் கூட்டம் இங்கு நடக்க உள்ளதால் உங்கள் நிலங்களில் இருக்கும் பயிர்களை அறுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

எங்களின் பயிர்கள் இன்னும் அறுவடைக்கு தயாராக இல்லை. மோடியின் கூட்டத்திற்காக நாங்கள் பயிர்களை முன்கூட்டியே அறுவடை செய்ய மாட்டோம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நீங்கள் பயிர்களை அறுவடை செய்யுங்கள் நாங்கள் இழப்பீடு வழங்குகிறோம் என்று அதிகாரிகள் கூறியும் விவசாயிகள் கேட்கவில்லை.
பயிர்களை அறுவடை செய்தே தீர வேண்டும் என்று வற்புறுத்தினால் போராட்டம் நடத்துவோம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில்,
எங்கள் பயிர்களை முன்கூட்டியே அறுவடை செய்யவிட மாட்டோம். அவர்கள் எங்களுக்கு 5 மடங்கு இழப்பீடு வழங்கினாலும் முன்கூட்டியே பயிர்களை அறுவடை செய்ய விட மாட்டோம் என்றார்.












Click it and Unblock the Notifications