ஃபரூக் அப்துல்லா மீது 27 வழக்குகள்.. வீட்டுக்காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு
ஸ்ரீநகர்: பொதுபாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவலை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்து சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசன பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு காஷ்மீர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொலைத்தொடர்பு மற்றும் இணையசேவைகள் துண்டிக்கப்பட்டது.

பரூக் அப்துல்லா
அத்துடன் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

சுற்றுலாவுக்கு அனுமதி
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியதால் மெல்ல மெல்ல கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டன. தற்போது வழக்கம் போல் இணையதள சேவைகள், தொலைத்தொடர்பு சேவைகள், வெளிநபர்கள் வந்து கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டன. சுற்றுலாவுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. பல தலைவர்களின் வீட்டுக்காவல் விலக்கி கொள்ளப்பட்டது.

லடாக் யூனியன் பிரதேசம்
அத்துடன் மத்திய அரசு அறிவித்தபடி ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இன்று முதல் செயல்பட தொடங்கி உள்ளன.

3 மாதங்கள் நீட்டிப்பு
இந்நிலையில் ஃபரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல் பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஃபரூக் அப்துல்லா மீது வன்முறையை தூண்டியது, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பிரிவுகளில் 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொதுப் பாதுகாப்பு சட்டத்தின்படி ஒருவரை அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் வரை வீட்டுக்காவலில் வைக்க முடியும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications