ஆஹா.. புதிய திருப்பம்.. இந்தியாவுடன் கைகோர்த்தது சீனா.. பாகிஸ்தானுக்கு புதிய கெடு விதிக்க முடிவு!
டெல்லி: பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை மற்றும் அவர்களுக்கான நிதியுதவியை தடுப்பது உள்ளிட்டட நடவடிக்கைகள் விஷயத்தில் சீனாவும் இந்தியாவுடன் இணைந்துள்ளது, அமெரிக்கா சவதி உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவாக இணைந்து பாகிஸ்தானுக்கு புதிய கெடு தேதியை நிர்ணயிக்க உள்ளன.
தீவிரவாதிகளுக்கு நிதி உதவியை தடுக்கும் சர்வதேச அமைப்பான எப்ஏடிஎப் பாகிஸ்தானுக்கு கடந்த அக்டோபர் மாதம் கெடு விதித்தது. அத்துடன் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்காத நாடாக, பாகிஸ்தானை குறிப்பிட்டு சாம்பல் பட்டியலில் சேர்த்தது.
அத்துடன் பாகிஸ்தான், தனது மண்ணில் செயல்படும் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும், வழக்கு தொடர வேண்டும். தீவிரவாதிகளுக்கு நிதியுதவியை தடுக்க வேண்டும் உள்ளிட்ட 13 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதை செய்ய செய்ய தவறினால் பாகிஸ்தான் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது.

இந்தியாவுக்கு ஆதரவு
இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் பெயருக்கு சில தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை மற்றும் அவர்களுக்கான நிதியுதவியை தடுப்பது உள்ளிட்டட நடவடிக்கைகள் விஷயத்தில் சீனாவும் இந்தியாவுடன் இணைந்துள்ளது, அமெரிக்கா, சவதி அரேபியா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவாக இணைந்துள்ளன.

ஜுன் வரை கெடு
இந்த நாடுகள் இணைந்து பாகிஸ்தானுக்கு கடுயைமாக எச்சரிக்கை செய்தி அனுப்ப உள்ளதாக கூறப்படுகிறது ஜுன் மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு புதிய கெடு விதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொர்பாக எப்ஏடிஎப் கூட்டத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாக்.கிற்கு ஆதரவு
தற்போதைய நிலையில் பாகிஸ்தானுக்கு ஆதராக பேசும் ஒரே நாடு என்றால் துருக்கி மட்டும். அந்நாடு மட்டும் பாகிஸ்தானுக்கு எப்ஏடிஎப் கூட்டத்தில் ஆதரவாக இருக்கும் என கூறப்படுகிறது. மலேசியா குறித்து தெளிவு இல்லை. இதில் மிகப்பெரிய மாற்றம் என்றால் சீனா இந்தியாவுக்கு ஆதரவாக திரும்பியது தான். கடந்த ஆண்டு மகாபலிபுரம் வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே தீவிரவாதத்திற்கு எதிராக சுமூகமான பேச்சு நடந்த நிலையில் இந்த மாற்றம் நடந்திருக்கலாம் என்கிறார்கள்.
Recommended Video

கருப்பு பட்டியல்
தற்போதைய நிலையில் பாக்கிஸ்தான் FATFன் சாம்பல் பட்டியலில் நீடிக்கும் என்பது உறுதியாகி உள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் தீவிரவாதிகளுக்கு நிதி உதவியை தடுத்தல், அவர்களை கைது செய்து தண்டித்தல் உள்ளிட்ட 13 நிபந்தனைகளை பாகிஸ்தான் செய்யாவிட்டால் அந்த நாடு கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவது உறுதி என்றும் கடும் நடவடிக்கை பாயும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications