பெற்ற மகளை மிரட்டி பலாத்காரம் செய்த காமூகன் கைது
நவி மும்பை: பெற்ற மகளை தினந்தோறும் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயர் கரீஷ்மா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பதாகும். இவர் தனது தந்தை காந்தேஷ்வர் மற்றும் தாயாருடன் நவி மும்பை, காந்தா காலனியில் வசித்து வருகிறார். கரீஷ்மாவின் தாயார் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தாய்க்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால் தன் ஆசைக்கு இணங்க வேண்டும் காமூகனான காந்தேஷ்வர் தனது மகள் கரீஷ்மா மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்தாக கூறப்படுகிறது.
தினம் தினம் தந்தையின் தொந்தரவு அதிகரிக்கவே வேதனையடைந்த கரீஷ்மா, தனக்கு நடந்த விபரீதத்தை தன் தோழியிடம் கூறி அழுதுள்ளார். உடனே கரீஷ்மாவின் தோழி தொண்டு நிறுவனத்தின் ஆதரவுடன் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காந்தேஷ்வரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications