பணத்துக்காக பிஞ்சு குழந்தைகளை அப்பா- மகனுக்கு விருந்தாக்கிய கொடூர தாய்- ஹைதராபாத்தில் பயங்கரம்!!
ஹைதராபாத்தில் பணத்துக்காக பெற்ற பிஞ்சு குழந்தைகளை அப்பா- மகனுக்கு தாய் ஒருவர் பலாத்காரம் செய்ய அனுமதித்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் தாயின் ஒப்புதலுடன் இரட்டையர் சிறுமிகளை பலாத்காரம் செய்த தந்தை மற்றும் மகன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த இரட்டை சிறுமிகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4-, வகுப்பு படித்து வருகின்றனர். அவர்களின் பக்கத்து வீட்டில் வசிக்கும் 40 வயதான ஜாஃபர் என்பவரும் 18 வயதை கூட எட்டாத அவரது மகனும் சிறுமிகளை மிரட்டி ஓராண்டாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.
இதில் கூடுதல் அதிர்ச்சியாக சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ய அவர்களின் அம்மாவே பணம் பெற்றுக்கொண்டு ஆதரவு தந்துள்ளார். வெளியே கூறினால் கொன்று விடுவோம் என்றும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.
உயிருக்கு பயந்த சிறுமிகள் நடப்பதை வெளியே கூறாமால் தவித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்துக்கு மேல் அப்பா- மகனின் தொல்லையை தாங்க முடியாத ஒரு சிறுமி தனது வகுப்பாசிரியையிடம் கூறி கதறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை தனது குழந்தைகள் உரிமை தொண்டு நிறுவனத்தின் மூலம் ஷம்ஷாபாத் போலிஸ் கமிஷனரிடம் விவகாரத்தை கொண்டு சென்றுள்ளார். இதையடுத்து சிறுமிகளிடம் விசாரித்த காவல்துறையினர் பணத்திற்காக அம்மாவே தான் பெற்ற குழந்தைகளை பக்கத்து வீட்டுகாரர்களுக்கு விருந்தாக்கியதை உறுதிசெய்தனர்.
தந்தை மகன் மற்றும் சிறுமிகளின் தாய் ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார், சிறுவனை குழந்தைகள் நல காப்பகத்துக்கு அனுப்பி விட்டு இருவரிடமும் விசாரித்து வருகின்றனர்.