கொல்லத்தில் குரங்குகளுக்கு ஓணம் விருந்து
கொல்லம்: கேரள மாநிலம் கொல்லத்தில் குரங்குகளுக்கு ஓணம் விருந்து வழங்கும் விழா நடைப்பெற்றது.
கேரளமாநிலத்தில் எராளமான பண்டிகைகள் பழசை மறக்காமல் கொண்டாடுவது வழக்கம். மீனுக்கு உணவு ஊட்டும் திருவிழாவை கடற்கரையில் நடத்துவர்.
அதுபோல் வேண்டுதல் காரணமாக ஆண்கள் பெண் வேடமிட்டு நேர்த்திகடன் செலுத்துவது என பல்வேறு பாரம்பரிய விழாக்களை கொண்டாடும் இம்மக்கள் ஓணம் பண்டிகையை முன்னிட்டு குரங்குகளுக்கு அறுசுவை விருந்து வழங்கும் திருவிழா வையும் நடத்தினர்.

கடந்த 100 ஆண்டு காலமாக கொல்லம் சாஸ்தா தோப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் இதனை தொடர்ந்து கடைப் பிடித்து வருகின்றனர்.
ஓணம் பண்டிகை தினமான இன்று குரங்குகளுக்கு ஓணம் விருந்து வைபோகம் நடைப்பெற்றது. இதில் குரங்குகளுக்கு அறுசுவை உணவுகள் பரிமாறப்பட்டன. எராளமான குரங்குகள் ஓடிவந்து அறுசுவை உணவை உண்டு மகிழ்ந்து சென்றன.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் காலம் காலமாய் எங்கள் முன்னோர்கள் செய்ததை நாங்களும் பின்பற்றி வருகிறோம் என்றனர்.












Click it and Unblock the Notifications