எம்.பி.க்கள் முகத்தில் காரித் துப்ப வேண்டும் போல் உள்ளது: பத்திரிக்கையாளர் வேத் பிரதாப் வைதிக்

யோகா குரு பாபா ராம் தேவின் நெருங்கிய நண்பரும், பத்திரிக்கையாளுமான வேத் பிரதாப் வைதிக் கடந்த 2008ம் ஆண்டு நடந்த மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக இருந்த ஹபீஸ் சயீதை பாகிஸ்தானுக்கு சென்று கடந்த ஜூலை மாதம் சந்தித்து பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அவர் கூறுகையில்,
என்னை தேசத் துரோகி என்று அறிவிக்க ஆதரவு தெரிவித்திருந்தால் 545 எம்.பி.க்கள் முகத்திலும் காரித் துப்புவேன். என்னை சிறைக்கு அனுப்ப அரசு நினைத்தால் திஹார் சிறையில் எனக்கு பக்கத்து அறையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை அடைக்க வேண்டும். அவர் கார்கிலில் நூற்றுக்கணக்கான இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட காரணமாக இருந்த முன்னாள் பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரபை சந்தித்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்றார்.
வைதிக் சயீதை சந்தித்தது அரசுக்கு தெரியாமல் இருந்திருக்காது என்ற பிரச்சனை கிளம்பியது. ஆனால் சயீத், வைதிக் சந்திப்பு குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று மத்திய அரசு தெரிவித்தது.












Click it and Unblock the Notifications