கெயில் எரிவாயு குழாய் வெடித்து 15 பேர் பலி: கேஸ் லீக்.. அடுப்பு பற்ற வைத்தபோது விபரீதம்
குண்டூர்: ஆந்திராவில் கெயில் நிறுவன எரிவாயு குழாய் வெடித்ததில் 15 பேர் பலியாகினர். எரிவாயு கசிந்திருந்தபோது டீக்கடைக்காரர் ஒருவர் அடுப்பை பற்ற வைத்ததால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டம் நாகாரத்தில் உள்ள கெயில் நிறுவன எரிவாயு குழாய் வெடித்ததில் தொழிலாளர்கள் 15 பேர் பலியாகினர், 12 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த தொழிலாளர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்தை அடுத்து எட்டு தீ அணைப்பு வண்டிகளில் வந்த தீ அணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தை அடுத்து நாகாரம் பகுதி முழுவதும் உள்ள எரிவாயு இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. தீ விபத்தை அடுத்து அந்த பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
{ventuno}
அதிகாலை 4.30 மணி அளவில் எரிவாயு கசிந்து நாகாரம் பகுதி முழுவதும் பரவி இருந்திருக்கிறது. இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் காலையில் அடுப்பு பற்ற வைத்தபோது தீப்பிடித்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே பலியானவர்களில் 12 பேரின் அடையாளம் காணப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications