மும்பையில் மரச்சாமான் கடையில் பயங்கரத் தீ விபத்து - தீயில் கருகி ஒருவர் பரிதாப பலி!
மும்பை: மும்பையில் மரச்சாமான்கள் விற்கும் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை, நாக்பாடா பகுதியில் மரச்சாமான்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. இந்த கடையில் காலை 11 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் கடையில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். திடீரென கடையில் இருந்து பயங்கர வெடி சத்தம் கேட்டது.

கொழுந்து விட்டு எரிந்த தீ:
சிறிது நேரத்தில் தீ கடை முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு 6 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்தனர்.
குறுகலான கடைப் பகுதி:
தீயணைப்பு வாகனங்கள் செல்லமுடியாத குறுகலான பகுதி என்பதால் தீயணைப்பு படை வீரர்கள் மட்டும் தண்ணீர் குழாய்களை கொண்டு சென்று கடையில் எரிந்த தீயை சுமார் 4 மணி நேரம் போராடி அணைத்தனர். இதற்கிடையே தீயில் யாராவது சிக்கி இருக்கிறார்களா என கடையின் உள்ளே சென்று தீயணைப்பு வீரர்கள் சோதனை செய்தனர்.
ஒருவர் பரிதாப பலி:
அப்போது அங்கு உடல் கருகிய நிலையில் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். தகவல் அறிந்து வந்த நாக்பாடா போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மரப் பொருட்கள் நாசம்:
தீயில் கருகி உயிரிழந்தவர் யார் என்பது உடனடியாக தெரியவில்லை. மேலும் இந்த தீ விபத்தில் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார், தீ விபத்திற்கான காரணம் என்ன என்பதை கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications