மும்பை “டைம் ஸ்கொயர்” கட்டிடத்தில் தீ- உயிர்ச்சேதம் குறித்து தகவல் இல்லை!
மும்பை: மும்பையில் அமைந்துள்ள "டைம் ஸ்கொயர்" என்கின்ற கட்டிடத்தில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு படையினர் விரைவாக வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகரான மும்பையின் கிழக்கு அந்தேரியில் அமைந்துள்ள டைம்ஸ் சதுக்கம் என்ற கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் திடீரென இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

உடனடியாக, அங்கிருந்த மக்கள் தகவல் அளித்ததையடுத்து 8 தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. மேலும், பொருட்சேதம், உயிர்சேதம் குறித்த தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை.
லேசாக ஏற்பட்ட இந்த விபத்து உடனடியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த கட்டிடத்தில் பல கார்ப்பரேட் ஐடி நிறுவனங்களின் அலுவலகங்கள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications