கவுடா மகன் விவகாரம்: பலாத்காரம் செய்தவர் நலமாக வாழ பூஜை செய்த நடிகை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பலாத்கார புகார் அளித்த கார்த்திக் கவுடா பெயரில் நடிகை மைத்ரி சிறப்பு பூஜை செய்து அவருக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்று வேண்டிக்கொண்டார்.

First filing rape complaint next performs pooja
  • மத்திய ரயில்வே அமைச்சர் மகன் சதானந்தகவுடாவின் மகன் கார்த்திக் கவுடா தன்னை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் செய்துகொண்டதாகவும், நடிகை மைத்ரேயா பெங்களூர் ஆர்டிநகர் காவல் நிலையத்தில் பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளார்.
  • இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கார்த்திக் பெயரில் இன்று பெங்களூர் ஆர்டிநகரிலுள்ள சாய்பாபா கோயிலில் மைத்ரேயா சிறப்பு பூஜை நடத்தினார். கார்த்திக்கிற்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்று வேண்டிக்கொண்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
  • என்ன இருந்தாலும் அவர் தாலி கட்டிய கணவர் என்பதால் பூஜை செய்ததாக மைத்ரேயா தெரிவித்தார். புகாரும் கொடுத்துவிட்டு பூஜையும் செய்த மைத்ரேயா பெண்களின் அனுதாபத்தை பெற்றுள்ளார்.
  • இதனிடையே, இந்த புகார் ஒரு சதி என்று ரயில்வே அமைச்சர் சதானந்தகவுடா தெரிவித்தார். ஒருவேளை தவறு செய்திருந்தால் சட்டப்படி எனது மகன்மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு முழு சுதந்திரம் உள்ளது. நான் தலையிட மாட்டேன் என்றார்.
  • கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறுகையில், மைத்ரேயா எனறால் யார் என்று எனக்கு தெரியாது. சட்டம் தனது கடமையை செய்யும் என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+