நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 9ம் தேதி வரை ஒத்தி வைப்பு
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மார்ச் 9ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடரின் முதல் பகுதி முடிந்ததை அடுத்து இருஅவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
டெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் 9ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி மாதம் 31ம் தேதி குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் தொடக்க உரையோடு தொடங்கியது. பிப்ரவரி 1ம் தேதி ஒருங்கிணைந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
முன்னதாக, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உரையின் போது, மயங்கி விழுந்து மரணம் அடைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் இ. அகமது மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு உரிய மரியாதை அளிக்கும் வகையில் ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வந்தன. இன்றோடு பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி முடிவடைந்ததையடுத்து, இரு அவைகளையும் அடுத்த மாதம் மார்ச் 9ம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
மார்ச் 9ம் தேதி இரண்டாம் கட்டமாக தொடங்கும் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் மீண்டும் ஏப்ரல் 13ம் தேதி முடிவடையும்.