மீனுக்கு "மூக்குத்தி" போட்டு கொடுமைப்படுத்திய கிராதகர்கள்!
பெங்களூரில் மீனுக்கு இரும்பு வளையத்தை மூக்குத்தி போலபோட்டு விற்பனை செய்த நபரை போலீஸார் பிடித்து மீன்களை மீட்டனர்.
பெங்களூரு: பெங்களூரில் உள்ள ஒரு அலங்கார மீன் கடையில் மீனுக்கு இரும்பு வளையம் போட்டு மீனைக் கொடுமைப்படுத்தியதாக புகார் வந்ததைத் தொடர்ந்து அந்த மீன்களை விலங்கியல் ஆர்வலர்கள மீட்டுள்ளனர்.
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் ஆர்ஆர் அக்வா பெட்ஸ் என்ற மீ்ன் விற்பனையகம் உள்ளது. அங்கு கலர் கலராக பல விதமான மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அந்தக் கடைக்கு ஒரு ஆசிரியை மீ்ன் வாங்கப் போயுள்ளார். அப்போது ஒரு மீன் தொட்டியில் இரும்பு வளையம் மாட்டப்பட்ட மீன்களைப பார்த்து அதிரச்சி அடைந்தார்.

இது என்ன என்று கடைக்காரரிடம் கேட்டபோது இது மூக்குத்தி போல, வித்தியாசமாக இருப்பதற்காக மாட்டி விட்டுள்ளோம் என்று கடைக்காரர் பதில் கொடுத்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அந்த ஆசிரியை உடனடியாக விலங்குகளுக்காக மனிதர்கள் என்ற விலங்கியல் ஆர்வலர் அமைப்பிடம் புகார் கொடுத்தார்.
இதையடுத்து அந்த அமைப்பினர் போலீஸாரின் உதவியுடன் அந்த மீன்களை மீட்டுள்ளனர். மீன்களில் பொருத்தப்பட்டிருந்த வளையங்களும் அகற்றப்பட்டு விட்டன. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவரான சரத்லால் என்பவர் கூறுகையில், வழக்கமாக காயமடைந்த நாய், பறவை குறித்துத்தான் எங்களுக்குத் தகவல் வரும். ஆனால் இது வித்தியாசமான புகாராக இருந்தது.
கடைக்குச் சென்று பார்த்தபோது அந்த மீன்களின் மூக்கில் வளையங்களை மாட்டியிருந்தனர். இதையடுத்து ராஜராஜேஸ்வரி நகர் போலீஸில் புகார் கொடுத்தோம். போலீஸார் உதவியுடன் அந்த மீன்களை மீட்டோம். கடும் எச்சரிக்கையுடன் கடை உரிமையாளர் பின்னர் விடுவிக்கப்பட்டார். தற்போது வளையங்கள் அகற்றப்பட்ட மீன்கள் நலமாக உள்ளன என்றார்.
மூக்குத்தி போடப்பட்ட மீன்களை ஜோடி ரூ. 550 முதல் 750 வரை விற்றுள்ளார் அந்தக் கடைக்காரர்.
-
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications