மும்பை: 5 மாடி குடியிருப்பு இடிந்து தரைமட்டம்… 4 பேர் பலி- 5 பேர் படுகாயம்
மும்பை: மும்பை மாநகராட்சி ஊழியர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு இன்று காலையில் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் 4பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் 5 பேர் படுகாயமடைந்தனர்.

மும்பை டாக்கியார்டு ரோடு பகுதி பாபுஜேனு மார்க்கெட் ரோட்டில் இந்த குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு இன்று காலை பயங்கர சப்தத்துடன் இடிந்து விழுந்தது. இதில் 60 க்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளில் சிக்கினர் இதில் 4 பேர் உடல் நசுங்கி பலியானார்கள் அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பலர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குடியிருப்பின் கீழ்தளத்தில் உள்ள ஒரு குடவுனில் பராமரிப்பு வேலை நடந்தது. இந்நேரத்தில் கட்டடம் இடிந்தது என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

இந்த கட்டடம் கட்டி 7 ஆண்டுகள்தான் ஆகிறது. இங்கு 22 குடும்பத்தினர் மாநகராட்சி ஊழியர்கள் வசித்து வந்தனர். மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்று மும்பை மேயர் சுனில்பிரபு கூறினார்.
4 தினங்களுக்கு முன்பு
கடந்த சில தினங்களுக்கு முன் மும்பை ரயில் நிலையம் அருகில் 42 குடும்பங்கள் வசிக்கும் 5 மாடி குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது. விபத்து நடந்த தினத்தன்று காலையில் இருந்தே குடியிருப்பில் அதிர்வு, மற்றும் விரிசல்கள் ஏற்பட்டு இருந்தது கண்டு அச்சம் அடைந்த குடியிருப்பாளர்கள் சுமார் 100 பேர் பாதுகாப்பாக வெளியில் வந்துவிட்டனர்.

7 வது முறை
அடுத்த சில நிமிடங்களிலேயே கட்டிடம் இடிந்து விழுந்ததால், மீதம் இருந்த 10 பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர் அவர்கள் மீட்க்கப்பட்டனர். இதனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. மும்பையில் கடந்த 6 மாதங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் இடித்து விழுந்து விபத்து ஏற்படுவது இது 7 வது முறையாகும். இந்தாண்டின் தொடக்கத்தில் தானேவில் நிகழ்ந்த கட்டட விபத்தில் 70 பேர் உயிரிழந்தனர்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications