அஸ்ஸாமில் 5 வயது சிறுவன் தலையை துண்டித்து நரபலி கொடுத்த மந்திரவாதி அடித்துக் கொலை
டிஸ்புர்: அஸ்ஸாமில் உள்ள தேயிலை தோட்டம் ஒன்றில் 5 வயது சிறுவன் தலையை துண்டித்து நரபலி கொடுத்த மந்திரவாதியை மக்கள் அடித்துக் கொன்றனர்.
அஸ்ஸாம் மாநிலம் சோனிட்புர் மாவட்டத்தில் உள்ள ராமபுரா பகுதியில் இருக்கும் தரஜுலி தேயிலை தோட்டத்தில் வசித்து வருபவர் நானு மிர்தா. அவர் ஒரு மந்திரவாதி என்று உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். அவர் அப்பகுதியில் வசிக்கும் 5 வயது சிறுவன் ஒருவரை நேற்று மாலை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து அவர் சிறுவனை தலை துண்டித்து கொலை செய்துள்ளார்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் வந்து நானுவை வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்து அடித்துக் கொன்றனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில்,
நானு அந்த சிறுவனை நரபலி கொடுத்திருக்கக்கூடும். ஏனென்றால் அவரது வீட்டில் சில சாமி சிலைகள், பூஜைக்குரிய பொருட்கள் இருந்தது. சிறுவனின் உடலுக்கு அருகில் அந்த பொருட்கள், சிலைகள் இருந்தன. சிறுவனின் தந்தைக்கும், நானுக்கும் இடையே பிரச்சனை உள்ளது. நானுவின் வீட்டில் இருந்து 4 வீடுகள் தள்ளி தான் சிறுவனின் வீடு உள்ளது என்றனர்.












Click it and Unblock the Notifications