கனமழையால் காஷ்மீரில் கரைபுரளும் வெள்ளம் – 7 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தலைநகர் ஸ்ரீநகர் உட்பட ஏழு மாவட்டங்களி்ல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயர கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தொடர் மழை காரணமாக பள்ளி களுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Flood alert in J&K, Jhelum crosses danger mark in Srinagar

ஜீலம் நதியில் வெள்ள அபாய அளவை காட்டிலும் அதி்களவில் தண்ணீர் செல்கிறது. தெற்கு காஷ்மீரில் உள்ள சங்கம் ஆற்றிலும் கனமழையால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

தொடர்மழையை அடுத்து மாநில அமைச்சர்கள் மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து முதல்வர்ž ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார்.

Flood alert in J&K, Jhelum crosses danger mark in Srinagar

மாநில மக்கள் வெள்ள அபாயம் குறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை . தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஜீலம் நதி பாயும் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு இரண்டு அமைச்சரவை குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+