கோவில் திருவிழா: மாஸ்க், சமூக இடைவெளியை மறந்து.. சாணியால் ஒருவரையொருவர் அடித்துக்கொண்ட மக்கள்!
கர்னூல்: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நடந்த கோவில் திருவிழாவில் குவித்து வைக்கப்பட்டு இருந்த வறட்டி என்னும் உலர் சாணியை எடுத்து மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர்.
அப்போது அவர்கள் யாரும் மாஸ்க் போடவும் இல்லை. சமூக இடைவெளியையும் கடைபிடிக்காமல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா தாக்கம்
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் உச்சத்தில் சென்று வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 2,00,000-ஐ கடந்து விட்டது. பல்வேறு மாநிலங்கள் கொரோனவை விரட்டியடிக்க இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இது ஒருபுறமிருக்க கொரோனவை கட்டுப்படுத்த தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன.

மக்கள் மதிப்பதில்லை
என்னதான் தடுப்பு மருந்துகள் கண்டுபிடித்தாலும் பொதுமக்கள் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாவிட்டால் கொரோனவை முழுமையாக ஒழிக்க முடியாது என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்து. ஆனால் பல்வேறு இடங்களில் மக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை மதிப்பதில்லை என்பதே உண்மை.

தடுப்பு விதிகளை மறந்தனர்
ஹரித்வாரில் உள்ள கும்பமேளாவில் மாஸ்க் மறந்து, சமூக இடைவெளியை துறந்து பக்தர்கள் ஒன்றுகூடிய வீடியோ சமுக வலைதளத்தில் வைரலானது. இந்த கும்பமேளாவில் கலந்து கொண்டவர்களில் மட்டும் கடந்த 4 நாட்களில் 2,000-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியானது.. இந்த நிலையில் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் கொரோனா தடுப்பு விதிகளை மறந்து ஆயிரக்கணக்கானோர் திரண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
|
சாணி அடிக்கும் திருவிழா
அதாவது அஸ்பரி மண்டலம் கைரூப்பாலா என்ற கிராமத்தில் ஆண்டுதோறும் தெலுங்கு வருட பிறப்புக்கு மறுநாள் நடக்கும் இந்த திருவிழாவில் வறட்டி எனப்படும் உலர் சாணியை ஒருவரை ஒருவர் வீசி அடித்துக் கொள்வது வழக்கம். இதேபோல் நேற்று நடந்த திருவிழாவில் குவித்து வைக்கப்பட்டு இருந்த சாணியை எடுத்து மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். ஆனால் அப்போது யாரும் மாஸ்க் போடவும் இல்லை. சமூக இடைவெளி என்பது சுத்தமாக இல்லை. இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications