கடந்த 6 வருடங்களில் தலித் நீதிபதி ஒருவர் கூட சுப்ரீம் கோர்ட்டில் பணி நியமனமாகவில்லை!
டெல்லி: கடந்த 6 வருடங்களில் தாழ்த்தப்பட்ட (SC) வகுப்பை சேர்ந்த எந்த ஒரு நீதிபதியும் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெறவில்லை.
தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் கொலீஜியம், ஹைகோர்ட் தலைமை நீதிபதிகளையும், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளையும் தேர்ந்தெடுத்து வருகிறது.
இந்த நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கூறி, அரசு தரப்பையும் இணைத்துக்கொண்டு நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் நடைமுறையை உறுதிப்படுத்தும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவந்தது மோடி அரசு. இதற்கு நாடாளுமன்றத்தில் ஒருமித்த ஆதரவு கிடைத்திருந்தது. ஆனால் சட்டத்தை ரத்து செய்து சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது.

இந்நிலையில் கொலீஜியம் முறையில் கடந்த 6 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் கூட உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. மேலும் இப்போது, நாட்டின் எந்த ஒரு ஹைகோர்ட் தலைமை நீதிபதியும், தாழ்த்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்தவர் இல்லை. இத்தனைக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் எண்ணிக்கை நாட்டின் மக்கள் தொகையில் 16 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
சுப்ரீம்கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்து 2010, மே 11ல் ஓய்வு பெற்ற கே.ஜி.பாலகிருஷ்ணன்தான் கடைசியாக உச்சநீதிமன்றம் பார்த்த தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த நீதிபதியாகும். இதேபோல, பழங்குடியின ஜாதியை சேர்ந்த பல நீதிபதிகளும் சுப்ரீம்கோர்ட் நீதிபதிகளாக பணி உயர்வு கிடைக்காமல் உள்ளனர்.
கடந்த 10 வருடங்களில் உச்சநீதிமன்றத்திற்கு, மூன்று பெண் நீதிபதிகள் மட்டுமே கொலீஜியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் நீதிபதி ஞான் சுதா மிஸ்ரா மற்றும் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகிய பெண் நீதிபதிகள் இப்போது ஓய்வு பெற்றுவிட்டனர். தமிழகத்தை சேர்ந்த ஆர்.பானுமதி மட்டுமே பெண் நீதிபதி என்ற வகையில் பணியில் உள்ளார்.
இம்மாத தொடக்கத்தில், மத்திய பிரதேசம், அலகாபாத் மற்றும் கேரளா மாநிலங்களின் தலைமை நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு தரப்பட்டனர். ஆனால், இதில் சீனியாரிட்டி மிஸ் ஆகிவிட்டதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது.
ஏனெனில், மேற்கண்ட மூன்று நீதிபதிகளைவிடவும், மணிப்பூர் தலைமை நீதிபதி மொகப்பத்ரா, பாம்பே ஹைகோர்ட் தலைமை நீதிபதி டி.ஹெச்.வகேலா, கல்கத்தா ஹைகோர்ட் தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர் ஆகியோர் சீனியர்கள். இருப்பினும் இவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை.
இதுகுறித்து ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், நான் தலைமை நீதிபதியாக இருந்தபோது, பி.டி.தினகரனை (தமிழகத்தை சேர்ந்தவர்) உச்சநீதிமன்ற நீதிபதியாக்க முயன்றேன். ஆனால் அவர் மீது சர்ச்சை எழுந்திருந்த காரணத்தால் முடியாமல் போனது. பலவீனமான ஜாதி பிரிவினருக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications