ஊழல் குற்றவாளிகளுடன் சந்திப்பு- சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா மீது விசாரணை- சுப்ரீம்கோர
டெல்லி: ஸ்பெக்ட்ரம் மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கின் குற்றவாளிகளை சந்தித்து பேசிய சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா மீது விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் ரஞ்சித் சின்ஹா தனது வீட்டில் ஊழல் வழக்கில் விசாரிக்கப்பட்டு வரும் ற்றம் சாட்டப்பட்டவர்களை சந்தித்து பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்ஹாவை பலமுறை அவரது வீட்டில் சந்தித்ததாகவும், எனவே அவரை அந்த வழக்குகள் விசாரணையில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குகளுக்கான மையத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது சி.பி.ஐ. இயக்குனரை அவரது இல்லத்துக்கு வந்து சந்தித்தவர்களின் வருகை பதிவேடு பட்டியலை, அது தொடர்பான ஆவணங்களையும் பொதுநல அமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த பட்டியலை அங்குள்ள சிலர் தன்னிடம் அளித்ததாகவும் கூறினார்.
ஆனால் பிரசாந்த் பூஷணின் புகாரை மறுத்து ரஞ்சித் சின்கா சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் ஸ்பெக்ட்ரம் மற்றும் நிலக்கரி ஊழலில் தொடர்புடைய நபர்களை பலமுறை ரஞ்சித் சின்ஹா சந்தித்தது தவறு என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம் விசாரணை அதிகாரிகள் இல்லாத நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சின்ஹா சந்தித்திருக்கக்கூடாது. எனவே அவரிடம் விசாரணை நடத்தவேண்டியது அவசியமாகிறது என்று தெரிவித்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்குகளில் தொடர்புடையவர்களுடன் சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்ஹா ஆலோசனைக் கூட்டம் நடத்தியது தொடர்பாக ஜூன் 7-ந் தேதிக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறும் மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பிடம் உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டு உள்ளது.
இதனிடையே பிரசாந்த் பூஷண் பொய்யான வாக்குமூலம் அளித்துள்ளார் என்ற சின்ஹாவின் கூற்றையும் உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications