உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கபாடியா உடல்நலக் குறைவால் மரணம்
மும்பை: டெல்லியில் அமைந்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கபாடியா உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
சுப்ரீம்கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா. மும்பையைச் சேர்ந்த இவர் உடல்நலக்குறைவு காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 68.
மறைந்த தலைமை நீதிபதிக்கு மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். அவரது உடல் அடக்கம் தெற்கு மும்பையில் உள்ள வாக்கீஸ்வரில் நேற்று நடந்தது. இதில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தொடக்கத்தில் மும்பை ஹைகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வந்த அவர், சுப்ரீம்கோர்ட்டின் தலைமை நீதிபதியாக கடந்த 2010 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி பிரதீபா பாட்டீலால் நியமிக்கப்பட்டார். கபாடியா 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications