For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புது வாழ்க்கை.. குட்டிப் பாப்பா.. புது கார்.. கலக்கும் ஸ்ரீசாந்த்

Google Oneindia Tamil News

டெல்லி: ஐபிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரத்தில் சிக்கி ஆயுள்கால தடை விதிக்கப்பட்டு கிரிக்கெட்டிலிருந்து விலகி புது வாழ்க்கை வாழ்ந்து வரும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தனது பெண் குழந்தையின் படத்தையும், தான் வாங்கியுள்ள புதிய ஜாகுவார் கார் படத்தையும் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசாந்த் இந்திய கிரிக்கெட் அணியில் வேகப் பந்து வீச்சாளராக வலம் வந்தார். ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்து ஆடி வந்தார்.

2013 ஐபிஎல் தொடரின்போது இவர் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக புகார் கிளம்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கைது செய்யப்பட்டார் ஸ்ரீசாந்த். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

ஆயுள் கால தடை

ஆயுள் கால தடை

மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதைத் தொடர்ந்து ஸ்ரீசாந்த்துக்கு பிசிசிஐ ஆயுள் காலத் தடை விதித்தது. இதனால் கிரிக்கெட் உலகிலிருந்து விடுபட்டார் ஸ்ரீசாந்த்.

ராஜகுமாரியுடன் திருமணம்

ராஜகுமாரியுடன் திருமணம்

இதைத் தொடர்ந்து ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜகுடும்பத்தைச் சேர்ந்த புவனேஸ்வரியை மணந்து கொண்டார். புவனேஸ்வரிதான் ஸ்ரீசாந்த்தின் வழக்குக்கு உறுதுணையாக இருந்து உதவியவர் ஆவார்.

அழகான பெண் குழந்தை

2013ம் ஆண்டு புவனேஸ்வரியை மணந்தார் ஸ்ரீசாந்த். அவருக்கு 3 மாதத்திற்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது. மனைவி, குழந்தையுடன், அமைதியான அழகான குடும்பம் நடத்தி வருகிறார் ஸ்ரீசாந்த்.

டிவிட்டரில் மகள் படம்

இந்த நிலையில் தனது மகள் படத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார் ஸ்ரீசாந்த். மகளை செல்லமாக அணைத்தபடி அந்தப் புகைப்படத்தில் காணப்படுகிறார் ஸ்ரீசாந்த்.

புதுக் கார்

மேலும் அவர் சமீபத்தில் புதிதாக ஜாகுவார் கார் ஒன்றையும் வாங்கியுள்ளார். அந்தக் காரில் தனது மனைவியுடன் ஜாலியாக போய் வந்ததையும் டிவிட்டரில் போட்டுள்ளார் ஸ்ரீசாந்த்.

English summary
The former Indian cricketer sreesanth has bought a new car to gift his wife.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X