82 வயசாய்ருச்சு.. 28 வருடமாக விடாமல்.. விரதமிருக்கும் பாட்டி.. எதற்காக.. ஆச்சரிய தேவி!
ஜபல்பூர்: ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று 1992ஆம் ஆண்டில் இருந்து வெறும் பழங்கள் சாப்பிட்டு, மோர் மட்டும் குடித்து வருகிறார் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயது மூதாட்டி. இவர் ஒரு முன்னாள் சமஸ்கிருத ஆசிரியை. இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு, கோயில் கட்டி முடிக்கும் வரை இதையே தொடர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது முன்னாள் சமஸ்கிருத ஆசிரியை ஊர்மிளா தேவியின் ஆசை, எண்ணம், விருப்பம். ஜபல்பூரைச் சேர்ந்த இவர் 1992ஆம் ஆண்டில் இருந்து இதற்காக விரதம் இருந்து வருகிறார். அதாவது அவரது 54வது வயதில் இருந்து விரதம் இருந்து வருகிறார்.

கடந்தாண்டு இறுதியில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர், இவரது விரதத்தை முடித்துக் கொள்ளுமாறு, பலரும் கேட்டுள்ளனர். ஆனாலும், இதற்கு மறுத்துள்ளார். அயோத்தியில் கோயில் உருவான பின்னர், அதை பார்த்த பின்னர்தான் விரதத்தை முடித்துக் கொள்வேன் என்று கட்டாயமாக தெரிவித்து விட்டார். அயோத்தி தீர்ப்புக்குப் பின்னர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி நன்றி தெரிவித்துள்ளார்.
ஆனாலும், தொடர்ந்து இவர் விரதம் இருப்பதால், உடல் நலம் பாதிக்கப்படும் என்று அவரது குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்துள்ளனர். அவரது மகன் சதுர்வேதி கூறுகையில், ''அவரது உடல் நலம் பாதிக்கப்படுமோ என்று நாங்கள் வருத்தப்படுகிறோம். நாங்கள் கேட்டுக் கொள்வதையும் மறுத்து தொடர்ந்து விரதம் இருக்கிறார்.
கோயில் தற்போதைக்கு கட்டப்பட மாட்டாது, விரதத்தை முடித்துக் கொள்ளுங்கள் என்று பலரும் கேட்டுக் கொண்டும் கைவிடவில்லை. அப்போதெல்லாம், கோயில் கற்களால் கட்டப்படும் என்று கூறுவார். அர்ப்பணிப்புடன் எடுக்கப்படும் முடிவுகள் எப்போதும் நிறைவேறும் என்பதற்கு எனது தாய் உதாரணம்'' என்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications