தடுப்பு சுவரில் வேகமாக மோதிய கார்.. நூலிழையில் உயிர் தப்பிய முன்னாள் முதல்வர்! உத்தராகண்ட்டில் ஷாக்
டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஹரிஷ் ராவத்தின் கார் விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் அவருக்கு நெஞ்சில் காயம் ஏற்பட்டிருக்கிறது.
ஹரிஷ் ராவத் காரில் ஹல்த்வானியில் இருந்து காஷிபூருக்கு செய்தியாளர் சந்திப்புக்காக சென்றுக்கொண்டிருந்தார். அப்போது உதம் சிங் நகரில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் வேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் ஹரிஷ் ராவத்துக்கு நெஞ்சில் காயம் ஏற்பட்டிருக்கிறது. நெஞ்சு வலியால் துடித்த அவரை உள்ளூர் போலீசார் மீட்டு அருகிலிருந்த ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பின்னர் முதலுதவி சிகிச்சை பெற்றதையடுத்து மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் மற்றும் பிற மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தீவிர சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல் நிலை அபாய கட்டத்தை தாண்டியதாகவும், அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சாரஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் அவருடன் பயணித்த பாதுகாப்பு அதிகாரிகளும் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு கைகளிலும், தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. ஓட்டுநர் நல்வாய்ப்பாக உயிர் தப்பியிருக்கிறார். இந்த விபத்து நள்ளிரவு 12.15 மணியளவில் ஏற்பட்டதால் உடனடியாக விபத்து தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. தற்போது காயமடைந்துள்ள பாதுகாப்பு அதிகாரிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல ராவத்தின் உடல் நிலை மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. விபத்திலிருந்து ராவத்தை காப்பாற்றியதில் உள்ளூர் போலீசாரின் பங்கு அளப்பரியது என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் விபத்து தொடர்பாக காவல்துறை தனது விசாரணையை தொடங்கியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications