விஷக்காளானைச் சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி... அசாமில் சோகம்!
ஜோர்கத் : அசாமில் விஷக்காளானை சமைத்துச் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அசாம் மாநிலம் சிவசாகர் மாவட்டம் ஜோர்கத் என்ற இடத்தில் டீ எஸ்டேட் ஒன்றில் வசித்து வந்த குடும்பத்தினர், கடந்த ஞாயிறன்று அருகில் இருந்த வனப்பகுதியில் இருந்து பறித்து வந்த காளான்களை சமைத்து சாப்பிட்டுள்ளனர். அவை விஷக்காளான்களாக இருந்ததால், சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே நான்கு பேரும் மயங்கினர்.

அவர்களை அக்கம்பக்கத்தார் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மருத்துவர்கள் அறிவுரைப்படி மேல்சிகிச்சைக்காக அவர்கள் நான்கு பேரும் அசாம் மருத்துவக் கல்லூரி மருத்துவத்துவமனைக்கு மாற்றப் பட்டனர். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி நான்கு பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தார்கள்.
விஷக் காளானைச் சாப்பிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications