ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 4 போலீசார் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் அனந்த்நாக் பகுதியில் ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அப்போது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கான்ஸ்டபிள் இஷ்பாக் அகமது மிர், ஜாவித் அகமது பட், முகமது இக்பால் மிர், எஸ்பிஓ அடில் மன்சூர் ஆகிய 4 போலீசார் சுட்டுகொல்லப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து ஏரளாமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும் அங்கு பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன் போலீசார் மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகிய நான்கு பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications