For Quick Alerts
For Daily Alerts
Just In
மேற்கு வங்கத்தில் 4ம் கட்ட வாக்குப்பதிவு அமைதியான முறையில் தொடங்கியது
கொல்கத்தா: மொத்தம் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெறும், மேற்கு வங்க மாநிலத்தில் 49 தொகுதிகளுக்கான, 4ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
மேற்கு வங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு, மார்ச் 4, 11 ஆகிய நாட்களில் நடைபெற்றது. 2ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்பரல் 17ம் தேதி நடைபெற்றது. 3ம் கட்ட வாக்குப்பதிவு அம்மாதம் 21ம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில், 4ம் கட்ட வாக்குப்பதிவு இன்று திங்கள்கிழமை நடைபெறுகிறது. 5ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 30ம் தேதியும், 6ம் கட்ட வாக்குப்பதிவு மே மாதம் 5ம் தேதியும் நடைபெறுகிறது. மே மாதம் 19ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்படும்.
Comments
English summary
Polling for the fourth phase of West Bengal Assembly polls began at 7:00 a.m on Monday.
Story first published: Monday, April 25, 2016, 8:14 [IST]