ஒரு பெண்ணை கதறக் கதற சீரழித்த இந்த பாவிகளை பிடிக்க உதவி செய்யுங்களேன்!
ஹைதராபாத்: பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து அந்த வீடியோவை வாட்ஸ்ஆப்பில் வெளியிட்ட 5 வாலிபர்களை பிடிக்க உதவி செய்யுங்கள் என்று பெண்கள் உரிமை ஆர்வலர் சுனிதா கிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஹைதராபாத்தில் என்.ஜி.ஓ. ஒன்றை நடத்தி வருபவர் பெண்கள் உரிமை ஆர்வலர் சுனிதா கிருஷ்ணன். அவருக்கு 15 வயது இருக்கையில் அவரை 8 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர். அதன் பிறகு அவர் பெண்கள் உரிமைக்காக போராடி வருகிறார். ஹைதராபாத்தில் வசிக்கும் அவரின் கணவர் ஒரு திரைப்பட இயக்குனர். அண்மையில் அவரது வாட்ஸ்ஆப்புக்கு 2 வீடியோக்கள் வந்துள்ளது.

அந்த வீடியோக்களில் பெண் ஒருவரை 5 பேர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு கேமராவுக்கு சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளனர். 6 மாதங்களுக்கு முன்பு அந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து சுனிதா கூறுகையில்,
வீடியோவை பத்து நொடிகள் பார்த்த உடன் அதை நிறுத்துவிட்டு போய் வாந்தி எடுத்தேன். என் கணவர் உதவியுடன் வீடியோவில் உள்ள பெண்ணின் அடையாளத்தை வெளிவராமல் அதை எடிட் செய்தேன். அந்த கயவர்களின் முகம் நன்கு தெரியும் வகையில் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்றார்.
இது போன்ற வீடியோக்கள் யாருக்காவது வந்தால் [email protected] என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு சுனிதா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சுனிதா எடிட் செய்யப்பட்ட வீடியோவை நேற்று யூடியூப்பில் வெளியிட்டார். அந்த கயவர்களை தெரிந்தால் அடையாளம் காட்டுங்கள் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி, உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளை சந்தித்து அந்த 5 பேரையும் கண்டுபிடித்து தண்டிக்க உதவுமாறு வலியுறுத்த உள்ளார் சுனிதா. இதற்கிடையே மர்ம நபர்கள் சுனிதாவின் கார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications