பெங்களூர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இளம் பெண் மீது பாலியல் அத்துமீறல்?
பெங்களூர்: கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் கடந்த வருட புத்தாண்டு கொண்டாட்டத்தை போலவே இந்த ஆண்டும், பெண் மீது பாலியல் சீண்டல் அரங்கேறியதாக பகீர் புகார் எழுந்துள்ளது.
பெங்களூரின் எம்ஜிரோடு, பிரிகேட் ரோடு பகுதிகள், சர்ச் தெரு போன்றவை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பெயர் பெற்றவை. ஆண்களும், பெண்களும் ஆயிரக்கணக்கில் 31ம் தேதி நள்ளிரவில் கூடி ஆட்டம், பாட்டம் போட்டு மகிழ்வர்.
ஆண்களும், பல நவநாகரீக பெண்களும் கூட மது போதையில் தள்ளாடியபடி அங்கே குவிவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது. இவ்வாண்டு சுமார் 60,000 பேர் கொணண்டாட வந்திருந்தனர்.

கிளுகிளு கொண்டாட்டம்
காதலர்களாக வருவோர், புத்தாண்டு பிறந்ததும், உதட்டு முத்தம் கொடுத்து புத்தாண்டை வரவேற்பார்கள். இதை காணவே ஒரு கூட்டம் அங்கு குவிவதும் உண்டு. அரை குறை ஆடைகள், போதை மயக்கம், முத்த சத்தம்.. என எம்ஜிரோடு மற்றும் பிரிகேடு ரோடு பகுதியே, பெரும் கிளுகிளுப்புடன் புத்தாண்டை வரவேற்பது வாடிக்கை.

பாதுகாப்பு அதிகரிப்பு
இந்த பகுதியில், கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, கூட்டமாக பல பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. சிசிடிவிகளில் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதையடுத்து இந்த ஆண்டு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

15,000 போலீசார்
பெங்களூர் நகரில் நேற்று இரவு மட்டும் 15,000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். எம்ஜிரோடு மற்றும் பிரிகேட் சாலை பகுதிகளில் சிசிடிவி காமிராக்கள் அதிகம் பொருத்தப்பட்டன. இந்த நிலையிலும், பாலியல் அத்துமீறல் புகார் எழுந்துள்ளது.

அத்துமீறலா?
பெண் ஒருவர் தன்னை சீண்டுவதாக கூறியபடி அழுதுகொண்டே ஓடியதாக நேரில் பார்த்த சிலர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளதாக சில மீடியாக்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதுவரை சிசிடிவி காமிரா எதிலும் அதுபோன்ற காட்சிகள் பதிவாகவில்லை. எந்த பெண்ணும் தான், பாதிக்கப்பட்டதாக, புகார் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications