தெலுங்கானாவில் கொடூரம்: காதலர் கண்முன்பு கல்லூரி மாணவி 4 பேரால் பலாத்காரம்

Subscribe to Oneindia Tamil

வாரங்கால்: தெலுங்கானாவில் 20 வயது கல்லூரி மாணவி தனது காதலர் கண் முன்பு 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் வாரங்கால் மாவட்டத்தில் உள்ள எனுமமுலா கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவியான ராணி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது காதலருடன் வெளியே சென்றுள்ளார்.

Girl gang-raped, boyfriend beaten up in Telangana

பாலாஜி நகரில் உள்ள எனுமமுலா விவசாய மார்க்கெட்டில் இருந்து அவர்கள் வீடு திரும்பியுள்ளனர். அப்போது 4 பேர் அவர்களை பின்தொடர்ந்து வந்துள்ளனர். பின்னர் அந்த 4 பேர் ராணியின் காதலரை அடித்து நொறுக்கியுள்ளனர்.

காதலரின் கண் முன்பே அந்த 4 பேரும் ராணியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து ராணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகள் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+