பலாத்காரத்திலிருந்து தப்பிய பெண் மீது துப்பாக்கிச் சூடு – குண்டு துளைத்து மரணம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லி அருகேயுள்ள நொய்டாவின் கன்ஷிராம் காலனி பகுதியில் வசித்து வந்த ஒரு பெண்ணை கடந்த மாதம் 31 ஆம் தேதி 3 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்தது.
அவர்களை தடுத்த அந்தப் பெண் தப்பிக்க முயன்றபோது குற்றவாளிகளில் ஒருவன் துப்பாக்கியால் சுட்டான். இதில் குண்டு பாய்ந்து அந்த பெண் மயங்கி விழுந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் குற்றவாளிகள் மூவரையும் கைது செய்து, கற்பழிப்பு குற்றச்சாட்டில் சிறையில் அடைத்தனர்.
குண்டு காயம் அடைந்த பெண் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து, பிடிபட்ட மூவரின் மீதும் பதிவு செய்யப்பட்டிருந்த பாலியல் பலாத்கார வழக்கு, தற்போது கொலை வழக்காக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications