"லிவ் இன்" ஆக வாழ்ந்து விட்டு கைவிட்டதாக பேஸ்புக் நண்பர் மீது இளம் பெண் புகார்
முசாபர்நகர்: உ.பி. மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் பேஸ்புக் மூலம் அறிமுகமாகி லிவ் இன் உறவு மூலம் சேர்ந்து வாழ்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர் மீது இளம் பெண் பரபரப்புப் புகார்களைக் கூறியுள்ளார்.
முசாபர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்தப் பெண் நொய்டாவில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரும் சாப்ட்வேர் என்ஜீனியர் ஒருவரும் பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளனர். இதில் காதல் மலரவே இருவரும் 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் லிவ் இன் உறவில் புகுந்தனர்.
இருவரும் சேர்ந்து வசிக்க ஆரம்பித்தனர். இந்த நிலையில் தற்போது தனது காதலர் மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளார் அப்பெண். இதுகுறித்து அப்பெண் கூறுகையில், நானும் அவரும் இணைந்து வாழ ஆரம்பித்தோம். என்னை அவர் திருமணம் செய்யவில்லை. ஆனால் அவருடன் நான் மனைவி போல வாழ்ந்து வந்தேன்.
என்னை பாலியல் ரீதியாக முழுமையாக பயன்படுத்திக் கொண்டார். என்னைத் திருமணம் செய்யுமாறு அவரிடம் கேட்டபோது, ரூ. 20 லட்சம் வரதட்சணையாக கொடுத்தால்தான் திருமணம் செய்வேன் என்று கூறி விட்டார். இப்போது என்னை மிரட்டவும் செய்கிறார் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக மாவட்ட எஸ்.பி. ஷர்வன் குமார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications