சிறுமியை பலாத்காரம் செய்ததாக கோவா எம்.எல்.ஏ. மீது வழக்கு
பனாஜி: கோவா எம்.எல்.ஏ. அடானாசியோ மான்சராட்டே நேபாளத்தை சேர்ந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவா மாநிலத்தில் உள்ள செயின்ட் க்ரூஸ் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அடானாசியோ மான்சராட்டே. அவர் கோவாவில் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது கடையில் பணத்தை திருடியதாக நேபாளத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அதன் பிறகு அந்த சிறுமி தலைமறைவானார்.

இந்நிலையில் சிறுமி பனாஜி காவல் நிலையத்தில் எம்.எல்.ஏ. மீது பாலியல் பலாத்கார புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக இருந்த சிறுமியை போலீசார் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி மான்சராட்டே அண்மையில் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டார். காங்கிரஸ் ஆட்சியில் கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் மான்சராட்டே.
பாலியல் புகார் குறித்து அவர் கூறுகையில்,
நான் விசாரணையில் இருந்து ஓட மாட்டேன். தற்போது நான் ஊரில் இல்லை. நாளை ஊருக்கு வந்துவிடுவேன். அந்த சிறுமி என் கடையில் வேலை பார்த்தார். பண விஷயமாக அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் என் மீது புகார் அளித்துள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications