கோவாவில் வாசனை பொருள் தயாரிப்பாளர் மோனிகா குர்தே பலாத்காரம் செய்து படுகொலை
பனாஜி: கோவாவில் பிரபல நறுமணப் பொருள் தயாரிப்பாளர் மோனிகா குர்தே பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் முன்னணி நறுமணப் பொருள் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர்களில் ஒருவர் மோனிகா குர்தே (வயது 39). கோவாவை சேர்ந்த இவர் சாங்கோல்டா கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த ஜூலை மாதம் தான் புரோவோரிம் கிராமத்தில் இருந்து இங்கு இடம்மாற்றி வந்து உள்ளார். இந்த கிராமம் பிரபல சுற்றுலா தலமான காலன்குயிட் கடற்கரை அருகே உள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை இவரது படுக்கையறை திறக்காமல் இருந்தது. வீட்டு வேலையாள் சந்தேகமடைந்தார். உடன் அவரது அறையின் கதவை உடைத்து பார்த்த போது நிர்வாண நிலையில் படுக்கையில் கை, கால்கள் கட்டப்பட்டு பிணமாக கிடந்தார். தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீசார் மேலும் கூறுகையில், எங்களுக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. நாங்கள் அவரது உடலை நிர்வாண நிலையில் கண்டோம். வீடு கொள்ளையடிக்கபட்டு உள்ளது. அவரது கை மற்றும் கால்கள் படுக்கையுடன் கட்டப்பட்டு இருந்தது. தனியாக இருந்த அவர் வீட்டில் என்னென்ன பொருட்கள் கொள்ளை போனது என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications