வாஸ்து செய்வதாககூறி ரூ.1.3 கோடி கொள்ளை... போலி சாமியார் கைது
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் தொழிலதிபர் வீட்டில் வாஸ்து பூஜை செய்வதாக கூறி, ரூ.1.3 கோடி பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற போலி சாமியாரை போலீஸார் கைது செய்தனர்.
ஹைதராபாத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் மதுசூதன் ரெட்டி. மதுசூதன் தனது வீட்டில் குடும்ப பொருளாதார நிலை, மருத்துவ பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என பூஜை செய்ய விரும்பியுள்ளார். இதையடுத்து அவரது வீட்டுக்கு சாமியாரை வைத்து பூஜை நடத்தியுள்ளார்.

சிவா என்னும் அந்த சாமியார் அண்மையில் தனது சிஷ்யர்களுடன் மதுசூதன் வீட்டில் வாஸ்து பூஜை செய்ய வந்துள்ளார். அப்போது, அந்த சாமியார் பிரசாதம் என கூறி மயக்க மருந்து கலந்த இனிப்பை வீட்டில் இருந்தவர்களுக்கு வழங்கியுள்ளனர். இதை சாப்பிட்ட மதுசூதன், அவரது மனைவி, மகன் ஆகியோர் சுயநினைவை இழந்து மயங்கி விழுந்துள்ளனர். இதையடுத்து, வீட்டில் இருந்த ரூ.1.3 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்த சிவா அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் மதுசூதன் அளித்த புகாரை அடுத்து ஹைதராபாத் போலீஸில் விசாரணை மேற்கொண்டனர். போலீஸார் நடத்திய விசாரணையில், சிவா பல்வேறு மோசடி சம்பவங்களில் தொடர்புடையது தெரியவந்தது. இந்நிலையில் பெங்களூருவில் இருந்த சிவாவை போலீஸார் நேற்று கைது செய்தனர். இவருடன் கார் ஓட்டுநர், சிஷ்யர்கள் என மேலும் 5 பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications