பெங்களூரு சிறையில் சசிகலா காலில் விழுந்த கோகுல இந்திரா, சி.ஆர். சரஸ்வதி, வளர்மதி
பெங்களூரு : சொத்துக்குவிப்பு வழக்கிற்காக பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவைப் பார்க்கப் போன சி.ஆர்.சரஸ்வதி, கோகுல இந்திரா மற்றும் வளர்மதி ஆகியோர் அவரது காலில் விழுந்து கும்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் முதல் குற்றவாளி ஜெயலலிதா மரணமடைந்தாலும் உச்சநீதிமன்றத்தில் இருந்த மேல் முறையீட்டு வழக்கு விடாது கருப்பாக விரட்டியதில் கூட்டுக்குற்றவாளிகள் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ளனர். ஆளுக்கு தலா. 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 15ஆம் தேதி முதல் மூவரும் பெங்களூருவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சசிகலாவின் ஆதரவுடனும், ஆலோசனையுடனுமே தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது.

தினகரன் விசிட்
சிறையில் இருக்கும் சசிகலாவை அவரது அக்காள் மகன் தினகரன், ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் சென்று பார்த்து வந்தனர். வழக்கறிஞர்களும் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அனுமதி மறுப்பு
சசிகலாவை சந்திக்க அதிமுகவினர் எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வந்த நிலையில் அனுமதி மறுக்கப்பட்டது. பெங்களூரு சென்று சிறையில் அனுமதி கிடைக்காமல் அமைச்சர்களும் திரும்பினர். பெண் நிர்வாகிகளுக்கும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சசிகலாவை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது.

அமைச்சர்கள் சந்திப்பு
கடந்த வாரம் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, செங்கோட்டையன் உள்ளிட்ட 4 பேர் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அரசியல் நிலவரம் குறித்தும் பேசியதாக தெரிகிறது. இதற்கு பல தரப்பில் இருந்தும் விமர்சனம் எழுந்தது.

வளர்மதி - கோகுல இந்திரா
சிறை நிர்வாகம் வாரம் ஒருமுறை மட்டுமே சசிகலாவை சந்திக்க அனுமதிக்க முடியும் என்று கூறியதை கடந்த முறை ஏமாற்றத்துடன் திரும்பியவர்கள் நேற்று முறைப்படி மனு அளித்து சி.ஆர்.சரஸ்வதி, கோகுல இந்திரா மற்றும் வளர்மதி ஆகிய மூவரும் சசிகலாவை சந்தித்துள்ளனர்.

காலில் விழுந்து கும்பிடு
சசிகலாவை நேரில் சந்தித்து அவருக்கு பழங்களை கொடுத்த மூவரும் படக்கென்று அவரது காலில் விழுந்து கும்பிட்டார்களாம். சிறையில் வந்து விழுந்து கும்பிடுகிறார்களே என்று அங்கிருந்தவர்கள் பார்த்துள்ளனர். சசிகலா இருப்பது பரப்பன அக்ரஹாரா சிறை என்பதை மறந்துவிட்டு, ஏதோ அதிமுக அலுவலகத்தில் காலில் விழுவது போல விழுந்து எழுந்தனர்.

சி.ஆர். சரஸ்வதி
சசிகலா சிறைக்கு சென்று 20 நாட்களுக்கு மேலாகி விட்டதால் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியுள்ளனர். சுமார் ஒரு மணி நேரம் பேசிய பின்னர் மூவரும் சிறையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டனர். ஆனால் என்ன பேசினோம் ஏது பேசினோம் என்பது பற்றி மூச்சு கூட விடவில்லை. நல்ல வேலை சிறையில் சின்னம்மா இட்லி சாப்பிட்டாங்க என்று சொல்லாமல் போனாரே சி.ஆர் சரஸ்வதி என்பதுதான் பெரிய ஆறுதல்.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications