தங்கத்தைப் பணமாக்கும் புதிய திட்டம்... மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் என கிரிசில் தகவல்
டெல்லி : தங்கத்தில் முதலீடு செய்பவர்கள், அதனை பணமாக்கிக்கொள்ளும் வகையில் கொண்டுவரப்படவுள்ள புதிய திட்டத்தின் மூலம், சேமிப்பு அதிகரிக்கும் என்று தர மதிப்பீட்டு நிறுவனமான கிரிசில் கூறியுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முழு அளவிலான முதல் பொது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று தாக்கல் செய்தார்.
அப்போது அவர், உலக தரத்திற்கு இணையாக உள்ள இந்திய பத்திர சந்தை மேம்படுத்தப்படும் என்றும், தங்கத்தை நேரடியாக வாங்குவதற்கு பதிலாக தங்கப்பத்திரம் திட்டமும் மேம்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் அதனை பணமாக்கிக்கொள்ளும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறிய அருண் ஜேட்லி, வங்கிகளில் தங்கத்தை டெப்பாசிட் செய்து நிதி திரட்டும் புதிய திட்டத்தின் மூலம், தங்கத்தின் மீதான ஆவண வடிவ முதலீடுகள் ஊக்குவிக்கப்படும் என்றார்.
மேலும், வெளிநாடுகளில் இருந்து தங்க நாணயங்கள் இறக்குமதி செய்யப்படுவதை குறைக்கும் வகையில், இந்தியாவிலேயே அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட தங்க நாணயங்கள் தயாரிப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். தங்கம் வாங்குவதற்கு டெபிட் மற்றும் கிரிடிட் கார்டுகள் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மத்திய அரசின் தங்கப்பத்திரம் திட்டத்தின் மூலம் முதலீடுகள் அதிகரிக்கும் என்று தர மதிப்பீட்டு நிறுவனமான கிரிசில் தெரிவித்துள்ளது. மேலும், தங்கத்தை பணமாக்கும் புதிய திட்டத்தின் மூலம் மக்களின் சேமிப்பும், வருவாயும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் கிரிசில் கூறுகிறது.
-
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்! -
அவரு மட்டும் வரல.. அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காரு! விஜய் செயலால் டென்ஷனான தவெகவினர்! -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
இனிமேல் சர்ச்சில் பேசாதப்பா.. விஜய் - திரிஷா செயலால்.. கோபம் அடைந்த உறவுகள்? பரபரப்பு போஸ்ட்! -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர்












Click it and Unblock the Notifications