For Quick Alerts
For Daily Alerts
Just In
உ.பி. கோரக்பூரில் தொடரும் சோகம்- 48 மணிநேரத்தில் மேலும் 7 குழந்தைகள் பலி
உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த 48 மணிநேரத்தில் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
கோரக்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த 48 மணிநேரத்தில் 7 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோரக்பூர் பாபா ராகவ்தாஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 60 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது நாட்டையே அதிர வைத்தது. ஆக்சிஸன் சிலிண்டர் நிறுவனத்துக்கு நிலுவைத் தொகையை அரசு மருத்துவமனை நிர்வாகம் செலுத்தாததால் அதன் விநியோகம் நிறுத்தப்பட்டது.
இதனால் மூளை வீக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்தன. ஆனால் உத்தரப்பிரதேச பாஜக அரசு இதை மறுத்து வந்தது.
இந்நிலையில் கடந்த 48 மணிநேரத்தில் மூளைவீக்கத்தால் பாதிக்கப்பட்ட மேலும் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments
English summary
Seven more children have died in Gorakhpur's BRD hospital due to Encephalitis in the last 48 hours, said reports.
Story first published: Tuesday, August 29, 2017, 22:05 [IST]