தேர்தல் ஆணைய அனுமதி- ராணுவ தளபதியாக தல்பீர்சிங் சுஹாக்கை பரிந்துரைத்தது பாதுகாப்பு அமைச்சகம்!!
டெல்லி: நாட்டின் புதிய ராணுவ தளபதியை மத்திய அரசு நியமிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து புதிய ராணுவ தளபதியாக தல்பீர்சிங் சுஹாக்கை பரிந்துரைத்து நியமனங்களுக்கான கேபினட் குழுவுக்கு அனுப்பியுள்ளது பாதுகாப்பு அமைச்சகம்.
புதிய ராணுவ தளபதியாக லெப்.ஜெனரல் தல்பீர்சிங் சுஹாக்கை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் மத்திய அரசு, புதிய தளபதியை நியமிக்க பாஜக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. இதனால் ராணுவ தளபதி நியமனத்தில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் இன்று ராணுவ தளபதியை நியமிக்க மத்திய அரசுக்கு அனுமதி அளித்தது.
இதைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சகம் லெப். ஜெனரல் தல்பீர்சிங் சுஹாக்கை புதிய தளபதியாக பரிந்துரைத்து நியமனங்களுக்கான கேபினட் குழுவுக்கு அனுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications