ஜம்மு-காஷ்மீர்: ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது.. குடியரசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை
ஜம்மு காஷ்மீர் குடியரசு தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார்.
Recommended Video

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. குடியரசு தலைவர் ஆட்சிக்கு அம்மாநில ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் ஆளும் பாஜக - மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) இடையிலான கூட்டணி உடைந்தது. பல்வேறு காரணங்களால் அங்கு ஆட்சி கவிழ்ந்து இருக்கிறது. பிடிபி கட்சிக்கு பாஜக கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் வாங்கியுள்ளது.

இதனால் அங்கு மெஹபூபா முப்தி தலைமையிலான கூட்டணி ஆட்சி முடிவிற்கு வந்துள்ளது.அங்கு காங்கிரஸ், என்சிபி, பிடிபி கூட்டணியும் பெரிய அளவில் உருவாக்கி வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை.
தற்போது அங்கு ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. அங்கு இப்போது தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை. இதனால் அம்மாநில ஆளுநர் வோரா, குடியரசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்துள்ளார்.
அவரது பரிந்துரை மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. ஒப்புதல் கிடைத்த பின் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும். இன்று அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.












Click it and Unblock the Notifications