15 நாட்கள் அவகாசம் அளித்த ஆளுநர்... மெஜாரிட்டியை நிரூபிப்பது ஜுஜுபி என்ற குமாரசாமி
கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார் ஆளுநர்.
பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு ஆளுநர் வஜுபாய் வாலா 15 நாட்கள் காலஅவகாசம் அளித்துள்ளார்.
கர்நாடகத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பது யார் என்று கேள்வி எழுந்தது. எண்ணிக்கை அடிப்படையில் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார்.
காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணி பெரும்பான்மை இருந்த போதிலும் எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். இதைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் எடியூரப்பாவுக்கு நேற்று அவகாசம் அளித்தது.

சட்டசபையில் பேச்சு
இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்று போவதற்கு பதில் நாமாகவே பதவி விலகினால் நல்லது என்று எண்ணிய எடியூரப்பா நேற்று சட்டசபையில் உருக்கமாக பேசிவிட்டு பதவி விலகுவதாக அறிவித்தார்.

ஆளுநர் அழைப்பார்
இதையடுத்து காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணி மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். இந்த கூட்டணி சார்பில் ஏற்கெனவே பேசி முடிக்கப்பட்டது போல் குமாரசாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பரமேஸ்வராவுக்கு துணை முதல்வர்
இதனிடையே குமாரசாமி வரும் 23-ஆம் தேதி பதவியேற்க முடிவு செய்துள்ளார். மேலும் அவரது அமைச்சரவை பட்டியலும் உத்தேசமாக வெளியானது. அதில் துணை முதல்வர் பதவி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரமேஸ்வராவுக்கு வழங்கப்படுவதாக தெரிகிறது.

உடனே நிரூபிக்க ரெடி
இந்நிலையில் குமாரசாமி கர்நாடக சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் காலஅவகாசத்தை ஆளுநர் வஜுபாய் வாலா அளித்தார். ஆனால் அவ்வளவு நாட்கள் எல்லாம் தேவையில்லை. பெரும்பான்மையை நிரூபிக்க எப்போதும் வேண்டுமானாலும் தான் தயாராக இருப்பதாக குமாரசாமி தெரிவித்துள்ளார்.
-
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications